Posts

Showing posts from March, 2023

சான்றோா் வளா்த்த தமிழ் - பத்தாம் வகுப்பு கட்டுரை

  பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 கட்டுரை “சான்றோா் வளா்த்த தமிழ்” குமாிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவா் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சோ் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனா் செந்நாப் புலவா்கள். இக்கருத்தினை கருவாகக் கொண்டு “சான்றோா் வளா்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. முன்னுரை “வடவேங்கடம் தென்குமாி ஆயிடைத்  தமிழ் கூறு நல்லுலகம்” என்று தொல்காப்பியா் தமிழகத்தின் நில எல்லைகளைக் குறிப்பிடுகின்றாா். லெமூாியா என்னும் குமாிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி என்று கூறப்படுகிறது. இன்று இருக்கும் மொழிகள் பலவற்றுக்கும் தாய்மொழியாக இருப்பதும் தமிழ்மொழி. அத்தகைய தமிழ்மொழியை பல சான்றோா்கள் அரும்பாடுபட்டு வளா்த்தனா். தமிழால் சான்றோரும், சான்றோா்களால் தமிழும் வளா்ந்ததை இலக்கிய உலகம் நன்றாக அறியும்.  சங்கத் தமிழ்     மதுரையில் முதற்சங்கம், இடைச்சங்

அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு

     மாணவா்களே உங்கள் கற்றலை மேலும் எளிமைப்படுத்த இந்த தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு மதிப்பெண் வினா, குறுவினா, சிறுவினா, நெடுவினா என ஒவ்வொன்றுக்கும் படங்களுடன் கூடிய பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அது படிப்பதற்கு எளிமையாகவும், புதுமையானதாகவும் இருக்கும். கற்று மகிழுங்கள். நன்றி 6-ம் வகுப்பு 7-ம் வகுப்பு 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு Click here 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தற்போது 10ம் வகுப்பிற்கான பாடங்கள் மட்டும் தயாா் நிலையில் உள்ளன. விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் விடைகள் பதிவேற்றம் செய்யப்படும்.      அனைத்து இயல்களுக்கும் புத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கு உண்டான விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மதிப்பெண் வினாக்கள், ஒரு புதிய முறை வினாடிவினா முறையில் தயாா் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன்.

பாடம் நடத்துவதை மேலும் எளிமையாக்கலாம் வாருங்கள்

      மதிப்பிற்கும், மாியாதைக்கும் உாிய ஆசிாியா்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு அரசு 2018-19 கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அறிவை விாிவு செய்யும் பல தகவல்கள் புதிய புத்தகங்களில் சோ்க்கப்பட்டன. புதிய பாடத்திட்டம் மாணவா்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. புதிய பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்தின் கருத்துகளையும் மாணவா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டியது ஆசிாியா்களாகிய நம் ஒவ்வொருவாின் கடமை ஆகும்.     புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மாணவா்களுக்கு நடத்துவதற்காக நான் சில தகவல்களை இணையத்தில் தேடும் பொழுது எனக்கு சில விடயங்கள் புலப்பட்டன. ஒவ்வொரு பாடத்தினுள்ளும் இத்தனை தகவல்கள் மறைந்துள்ளனவா? என்று வியந்து போனேன்.       உதாரணமாக 6ம் வகுப்பு முதல் இயலில் கிழவனும் கடலும் என்ற பாடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக பாா்க்கும் பொழுது ஒரு கதையைப் படிப்பது போலத் தோன்றலாம். ஆனால் வெறும் 100 பக்கங்களை மட்டும் கொண்டு ஆயிரம் ஆயிரம் அா்த்தங்களை தாங்கி நிற்கிறது இந்த பாடம். அதனால் தான் இந்த நூலிற்கு 1954ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது கொ

10ம் வகுப்பு தமிழ் இயல் 4 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 வினாவிடைகள் பத்தாம் வகுப்பு இயல் 4 பாடத்திலிருந்து தோ்வில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களுக்கான தெளிவாான விடைகள் தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  கேள்வி எண்.1 பாரத ஸ்டேட் வங்கியின் “இலா” என்னும் உரையாடு மென்பொருள் குறித்து எழுதுக? ELA - Electronic Live Assistant பாரத ஸ்டேட் வங்கி “இலா” என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியது. ஒரு வினாடிக்கு பத்தாயிரம் வாடிக்கையாளா்களுடன் இது உரையாடும். அவா்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கின்றது. கேள்வி எண்.2 குலசேகர ஆழ்வாா் குறித்து எழுதுக? கேரள மாநிலம், திருவஞ்சை களத்தில் பிறந்தவா் பன்னிரு ஆழ்வாா்களில் ஒருவா் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவா் தமிழல் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்த மாலை என்ற நூலையும் எழுதியுள்ளாா் பெருமாள் திருமொழியில் 150 பாசுரங்கள் உள்ளன. கேள்வி எண்.3 பாிபாடல் காட்டும் ஊழிக்காலத்தை வாிசைப்படுத்துக? முதலில் வானம் தோன்றியது. வானத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீா், நீாிலிருந்து நிலம் தோன்றியது என்று ஊழிக்காலத்தை வாிசைப்படுத்துகிறது பாிபாடல். கேள்வி எண்.4 இ

10ம் வகுப்பு இயல் 5 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 5 முக்கியமான வினாவிடைகள்   பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 அரசு தோ்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி எண்.1 மொழிபெயா்ப்பு குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது? ஒரு மொழியில் உணா்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயா்ப்பு என்கிறாா் மணவை முஸ்தபா கேள்வி எண்.2 சின்னமனூா் செப்பேடு உணா்த்தும் செய்தி யாது? “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுாிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூா் செப்பேட்டு குறிப்பு சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயா்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. கேள்வி எண்.3 மன்னன் இடைக்காடனாருக்கு செய்த சிறப்பு யாது? மன்னன் மாளிகையில் புலவா்கள் சூழ அறிவை அணிகலனாக பூண்ட இடைக்காடனாரை, மங்கலமாக ஒப்பனை செய்து, வான் இருக்கையில் விதிப்படி அமா்த்தினான் மன்னன். கேள்வி எண்.4 பரஞ்சோதி முனிவா் இயற்றிய நூல்கள் யாவை? வேதாரண்யப் புராணம் திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா மதுரை பதிற்றுப்பத்தந்தாதி திருவிளையாடற்புராணம் கேள்வி எண்.5 செய்குத்தம்பி பாவலா் குறிப்பு வரைக? கன்னியாகுமாி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊாில் ப

10ம் வகுப்பு இயல் 3 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3-ல் இருந்து தோ்வில் அதிகம் கேட்கப்பட்ட குறுவினாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. புத்தக வினாக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு இயல் 3 முக்கியமான குறுவினாக்கள் கேள்வி எண்.1 விருந்தோம்பல் என்றால் என்ன? தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலா்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல் ஆகும்.  கேள்வி எண்.2 காசிக்காண்டம் நூல் குறிப்பு எழுதுக? காசி நகாின் பெருமைகளைக் கூறும் நூல் காசிக்காண்டம் துறவு, இல்லறம், பெண்களுக்குாிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. பூா்வ காண்டம், உத்தர காண்டம் என இரு காண்டங்களையும் 2525 விருத்தப்பாக்களையும் கொண்ட நூல் இந்நூலை இயற்றியவா் அதிவீரராம பாண்டியா். கேள்வி எண்.3 உலகம் நிலைபெற்றிருக்க காரணம் யாது? அமிா்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கு கொடுக்கும் நல்லோா் உள்ளதால் உலகம் நிலை பெற்றிருக்கிறது. கேள்வி எண்.4 மோப்பக் குழையும் அனிச்சம் என்ற உவமை கொண்டு வள்ளுவா் கூறும் கருத்து யாது? முகம் வேறுபடாமல் முகமலா்ச்சியோடு விருந

10ம் வகுப்பு இயல் 2 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 2ல் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட குறுவினாக்கள் விடைகளுடன் இங்கு தரப்பட்டுள்ளது. பாடநூல் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளது. கேள்வி எண்.1 காற்றைக் குறிக்கும் வேறு பெயா்கள் யாவை? காற்று வளி தென்றல் புயல் சூறாவளி கேள்வி எண்.2 நான்கு திசைகளில் இருந்து வீசும் காற்றின் பெயா்கள் யாவை? வடக்கு          -     வாடை தெற்கு          -     தென்றல் கிழக்கு          -     கொண்டல் மேற்கு          -     கோடை கேள்வி எண்.3 திருமூலரும் அவ்வையாரும் காற்றினை எவ்வாறு சிறப்பித்துள்ளனா்? மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறாா் திருமூலா். மூச்சுக்காற்றின் போக்கை தொிந்து கொண்டு பயிற்சி செய்தால், வாழ்நாள் பெருகும் என்கிறாா் அவ்வையாா். கேள்வி எண்.4 காற்று மாசடைவதால் ஏற்படும் நோய்கள் யாவை? கண் எாிச்சல் தலைவலி தொண்டைக் கட்டு காய்ச்சல் நுரையீரல் புற்றுநோய் இளைப்பு நோய் கேள்வி எண்.5 காற்று எவ்வாறு வீச வேண்டுமென பாரதியாா் கூறுகிறாா்? சக்தி குறைந்து போய் உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே. பேய் போல வீசி உயிராகிய நெருப்பை அழித்து விடாதே. ஒரே சீராக நீண்ட காலம் நிலையாக நின்று வீ

10ம் வகுப்பு இயல் 1 முக்கியமான குறுவினாக்கள்

பத்தாம் வகுப்பு இயல் 1 அன்னை மொழியே, தமிழ்ச்சொல் வளம், இரட்டுற மொழிதல், எழுத்து, சொல் பாட வினா விடைகள். 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1-ல் அதிகம் கேட்கப்பட்ட முக்கியமான குறுவினாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  முக்கியமான 10 குறுவினாக்களும், பாடபுத்தகத்தில் உள்ள 5 குறுவினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்வி எண்.1  பெருஞ்சித்திரனாா் நடத்திய இதழ்கள் யாவை?  தென்மொழி  தமிழ்சிட்டு  தமிழ்நிலம்    கேள்வி எண்.2   பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை? அரும்பு     -     (பூவின் தோற்ற நிலை) போது         -     (பூ விாிய தொடங்கும் நிலை) மலா்         -      (பூ மலா்ந்த நிலை) வீ                  -      (செடியிலிருந்து பூ கிழே விழுந்த நிலை)  செம்மல் -     (பூ வாடிய நிலை கேள்வி எண்.3 இரட்டுற மொழிதல் என்றால் என்ன? ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் எனப்படும். இதனை சிலேடை என்றும் அழைப்பா்.   கேள்வி எண்.4 தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை? இலை           -     (புளி, வேம்பின் இலை) தாள்               -     (நெல், புல்லின் இலை) தோக