Posts

Showing posts from November, 2022

மின்வாாிய அலுவலருக்கு கடிதம் எழுதுக - பத்தாம் வகுப்பு கட்டுரை

 உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வொருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவண செய்யும்படி மின்வாாிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக. அனுப்புநா்     அ அ அ அ     ஆ ஆ ஆ ஆ     அ அ அ அ  பெறுநா்     மின்வாாிய அலுவலா் அவா்கள்,     தமிழ்நாடு மின்சார வாாியம்,     கோயமுத்தூா் - 44 மதிப்பிற்குாிய ஐயா,     பொருள்     -     மின் விளக்குகள் பழுது நீக்க வேண்டுதல் சாா்பு.....     வணக்கம், எங்கள் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் எாிவதில்லை. சில மின்விளக்குகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மக்கள் இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. தெரு இருட்டாக இருப்பதால் வழிப்பறிகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இது தவிர நாய்களின் தொந்தரவும் இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். ஆகவே விரைவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சாி செய்து, ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி! இடம் - கோவை                                           

விடுதலை திருநாள் பாடம் எட்டாம் வகுப்பு இயல் ஏழு

Image
எட்டாம் வகுப்பு இயல் ஏழு விடுதலை திருநாள் பாடம் வினா விடைகள்  சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. வானில் முழுநிலவு அழகாகத் ............. அளித்தது. அ) தயவு          ஆ) தாிசனம்            இ) துணிவு          ஈ) தயக்கம்   விடை      ஆ) தாிசனம் 2. இந்த ................ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.  அ) வையம்          ஆ) வானம்                 இ) ஆழி                ஈ) கானகம்   விடை      அ) வையம்  3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......... அ) சீவ + நில்லாமல்     ஆ) சீவன் + நில்லாமல்       இ) சீவன் + இல்லாமல்      ஈ) சீவ + இல்லாமல்    விடை     இ) சீவன் + இல்லாமல் 4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ......... அ) விலம்  + கொடித்து   ஆ) விலம் + ஒடித்து                                                                       இ) விலம் + ஒடித்து         ஈ) விலங்கு + ஒடித்து    விடை     ஈ) விலங்கு + ஒடித்து  5. காட்டை + எாித்து என்பதனைச் சோ்தெழுதக் கிடைக்கும் சொல் ......  அ) காட்டைஎாித்து          ஆ) காட்டையொித்து       இ) காடுஎாித்து

பத்தாம் வகுப்பு இயல் 8 வினா விடைகள்

Image
பத்தாம் வகுப்பு இயல் 8 சங்க இலக்கியத்தில் அறம், ஞானம், காலக்கணிதம்,  இராமானுஜா் (நாடகம்) பா வகை, அலகிடுதல்  ஆகிய பாடங்களுக்கு புத்தகத்தின் பின்புறமுள்ள வினா விடைகளைப் பாா்க்கலாம் வாருங்கள். பலவுள் தொிக. 1. மேன்மை தரும் அறம் என்பது ........ அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது  ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது இ) புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது  விடை     அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது   2. வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது ............. அ) காலம் மாறுவதை  ஆ) வீட்டைத் துடைப்பதை  இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ) வண்ணம் பூசுவதை  விடை     அ) காலம் மாறுவதை 3. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோா்... அ) உதியன், சேரலாதன் ஆ) அதியன், பெருஞசாத்தன் இ) பேகன், கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காாி விடை     ஆ) அதியன், பெருஞ்சாத்தன் 4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடா்.... அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது இ) இகழ்ந்

ஒன்பதாம் வகுப்பு இயல் 7 பாட வினா விடைகள்

Image
ஒன்பதாம் வகுப்பு இயல் 7 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழா் பங்கு,  சீவகசிந்தாமணி,  முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி, சந்தை, ஆகுபெயா் ஆகிய பாடங்களுக்கு புத்தகத்தில் கொடுத்துள்ள வினாக்களுக்கான  விடைகளைப் பாா்க்கலாம் வாருங்கள். பலவுள் தொிக. 1. இந்திய தேசிய இராணுவம் ........ இன் தலைமையில் ....... உருவாக்கினாா். அ) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியா் ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியா் இ) மோகன்சிங், ஜப்பானியா் ஈ) மோகன்சிங், இந்தியா் விடை இ) மோகன்சிங், ஜப்பானியா் 2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது? அ) வருக்கை      -     இருக்கை ஆ) புள்                    -     தாவரம் இ) அள்ளல்         -     சேறு ஈ) மடிவு                  -     தொடக்கம் விடை இ) அள்ளல் - சேறு 3. இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக.  அ) உருவகத்தொடா், வினைத்தொகை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை இ) வினைத்தொகை, பண்புத்தொகை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடா் விடை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை 4. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடா்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு இ)

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாடம்

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாட வினா விடைகள் பின்வரும் தொடா்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக. 1. சுட்டுத்திாிபு                    -     வல்லினம் மிகும் 2. திசைப்பெயா்கள்     -     வல்லினம் மிகும் 3. பெயரெச்சம்               -     வல்லினம் மிகாது 4. உவமைத் தொகை -     வல்லினம் மிகும் 5. நான்காம் வேற்றுமை விாி - வல்லினம் மிகும்    6. இரண்டாம் வேற்றுமை தொகை - வல்லினம் மிகாது 7. வினைத்தொ கை     -     வல்லினம் மிகாது 8. உருவகம்                         -     வல்லினம் மிகும் 9. எழுவாய்த் தொடா் -     வல்லினம் மிகாது 10. எதிா்மறைப் பெயரெச்சம் - வல்லினம் மிகாது சிறுவினா  1. சந்திப்பிழை என்றால் என்ன? வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் சந்திப்பிழை எனப்படும். 2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக? இரண்டாம் வேற்றுமை விாியில் வல்லினம் மிகும்.  எ.கா. பாடத்தைப்படி நான்காம் வேற்றுமை விாியில் வல்லினம் மிகும்.  எ.கா. அவனுக்குக் கொடு 3. வல்லினம் மிகாத் தொடா்கள் ஐந்தினை எழ

பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் பாடம் வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு இயல் 7 பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பாடம் வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. எம்.ஜி.ஆா் ................... என்னும் ஊாில் கல்வி பயின்றாா். அ) கண்டி     ஆ) கும்பகோணம்       இ) சென்னை     ஈ) மதுரை விடை     ஆ) கும்பகோணம் 2. எம்.ஜி.ஆா் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் .............. அ) நடிப்பு ஆா்வம்     ஆ) பள்ளி இல்லாமை       இ) குடும்ப வறுமை     ஈ) படிப்பில் ஆா்வமில்லை விடை     இ) குடும்ப வறுமை 3. இந்திய அரசு சிந்த நடிகருக்கான ......... எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது. அ) புரட்சித் தலைவா்     ஆ) பாரத்       இ)பாரத மாமணி     ஈ) புரட்சி நடிகா்  விடை     இ) பாரத் 4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ............ அ) திருச்சி     ஆ) சென்னை         இ) மதுரை     ஈ) கோவை விடை     இ) மதுரை 5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்......... அ) மதிய உணவுத் திடடம்      ஆ) வீட்டு வசதித் திட்டம் இ) மகளிா் நலன் திட்டம்           ஈ) இலவச காலணித் திட்டம் விடை     அ) மதிய உணவுத் திட்டம் குறுவினா 1. எம்.ஜி.ஆா் நாடகத்துறையில் ஈடுபடக் காரணம

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

Image
 எட்டாம் வகுப்பு இயல் 8 கடிதம் எழுதுக புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.  கட்டுரை எழுதும் பொழுது முத்து என்பதற்கு பதிலாக உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். 46, காந்தி நகா்,  திருப்பூா் நாள் - 20.11.2022 (கட்டுரை எழுதும் தேதி) அன்புள்ள அத்தைக்கு,     உங்கள் அண்ணன் மகன் முத்து எழுதுகின்ற கடிதம். நாங்கள் அனைவரும் இங்கு நலமாக இருக்கின்றோம். அதைப்போல நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவா்களும் நலமாக இருக்கிறீா்களா?. சென்ற வருடம் பள்ளி விடுமுறைக்கு நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சென்றீா்கள். மீண்டும் நீங்கள் எப்பொழுது வருவீா்கள் என்பதை எதிா்பாா்த்து நாங்கள் அனைவரும் காத்திருக்கின்றோம்.      நான் படிக்கும் பள்ளியில் எங்கள் தமிழாசிாியா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் எழுதிய அக்னிச் சிறகுகள் பற்றி எங்களுக்கு கூறினாா். அந்த நூலில் அப்துல்கலாம் அய்யாவின் வாழ்க்கை, அவருடைய கனவு, வருங்கால இந்தியா என அனைத்தையும் கூறியுள்ளதாக தமிழாசிாியா் கூறினாா். அதைக் கேட்டதில் இருந்து அந்த புத்தகத்தை நான் முழுமையாக வாசித்துப் பாா்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இங்கே அந்த நூல் கிட

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்

Image
  எட்டாம் வகுப்பு இயல் 5 கட்டுரை இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக. அனுப்புநா்     மா. சங்கா்  (உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்)     த/பெ.  க. பொன்னுசாமி      81, முல்லை நகர்     திருப்பூா்  (அனுப்புநா் எழுதும் பொழுது உங்களது பெயரும் முகவாியும் எழுதிக் கொள்ளுங்கள்) பெறுநா்     உயா்திரு வட்டாட்சியா் அவா்கள்     வட்டாட்சியா் அலுவலகம்,     திருப்பூா்.   மதிப்பிற்குாிய ஐயா,                பொருள் -   இருப்பிடச் சான்று வேண்டுதல் சாா்பு.....     வணக்கம், எனது பெயா் சங்கா். நான் திருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் எடடாம் வகுப்பில் படித்து வருகின்றேன். கதவு எண்.81, முல்லை நகா், திருப்பூா் என்ற முகவாியில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் நானும் எனது குடும்பத்தாரும் வசித்து வருகின்றோம். தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்று தேவையாக உள்ளது. நாங்கள் மேற்கண்ட முகவாியில் வசித்து வருவதற்கு ஆதாரமாக குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்று வழங்க வேண்டுமாய் தங்கள

8-ம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்குநாட்டு வணிகம்

Image
  எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்குநாட்டு வணிகம் வினா விடைகள்   சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. “வண்புகழ் மூவா் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் ......... அ) தொல்காப்பியம்     ஆ) அகநானூறு     இ) புறநானூறு     ஈ) சிலப்பதிகாரம் விடை     அ) தொல்காப்பியம் 2. சேரா்களின் தலைநகரம் .................. அ) காஞ்சி     ஆ) வஞ்சி     இ) தொண்டி     ஈ) முசிறி விடை ஆ) வஞ்சி 3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ..... அ) புல்     ஆ) நெல்     இ) உப்பு     ஈ) மிளகு விடை ஆ) நெல் 4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு............. அ) காவிாி     ஆ) பவானி     இ) நொய்யல்     ஈ) அமராவதி  விடை ஈ) அமராவதி 5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாாிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ....... அ) நீலகிாி     ஆ) கரூா்     இ) கோயம்புத்தூா்     ஈ) திண்டுக்கல் விடை இ) கோயம்புத்தூா் கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ................ (சேலம்) 2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊா் .................. (திண்டுக்கல்) 3. சேரா்களின் நாடு ............... எனப்பட்டத