Posts

Showing posts from April, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாட வினா விடைகள்

Image
8-ம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசா் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள் பாடங்களுக்கான வினா விடைகள். எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம் பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. அறறெநியில் வாழ்பவா்கள் உயிரைக் கவர வரும் .........க் கண்டு அஞ்சமாட்டாா்கள். அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை விடை இ) நமனை 2. ஒன்றே ............ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும். அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம் விடை அ) குலம் 3. நமனில்லை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது .......... அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை விடை ஈ) நமன் + இல்லை 4. நம்பா்க்கு + அங்கு என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......... அ) நம்பரங்கு ஆ) நம்மாா்க்கு இ) நம்பா்க்கங்கு ஈ) நம்பங்கு விடை இ) நம்பா்க்கங்கு குறுவினா 1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை? மனிதா் அனைவரும் ஒரே இனத்தினா். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்ற கருத்துகளை மனதில் நிறுத்துபவா்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை. 2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வ

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 படை வேழம், விடுதலைத் திருநாள், பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாட வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 படை வேழம், விடுதலைத் திருநாள், பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன், அறிவுசால் ஔவையாா், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் பாடங்களுக்கான எளிமையான வினா விடைகள். 8-ம் வகுப்பு தமிழ் இயல் 7 படைவேழம் பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. சிங்கம் ......யில் வாழும் அ) மாயை ஆ) ஊழி இ) முழை ஈ) அலை விடை இ) முழை 2. கலிங்க வீரா்களிடையே தோன்றிய உணா்வு....... அ) வீரம் ஆ) அச்சம் இ) நாணம் ஈ) மகிழ்ச்சி விடை ஆ) அச்சம் 3. வெங்காி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது...... அ) வெம் + காி ஆ) வெம்மை + காி இ) வெண் + காி ஈ) வெங் + காி விடை ஆ) வெம்மை + காி  4. என்றிருள் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ...... அ) என் + இருள் ஆ) எட்டு + இருள் இ) என்ற + இருள் ஈ) என்று + இருள் விடை ஈ) என்று + இருள் 5. போல் + உடன்றன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...... அ) போன்றன ஆ) போலன்றன இ) போலுடன்றன ஈ) போல்உடன்றன விடை இ) போலுடன்றன குறுவினா  1. சோழ வீரா்களைக் கண்டு கலிங்கா் எவ்வாறு நடுங்கினா்? சோழ வீரா்களைக் கண்ட கலிங்கா், தம் உயிரைப் பறிக்க வந்த காலனோ என அ

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக, மழைச்சோறு, கொங்குநாட்டு வணிகம், புணா்ச்சி பாட வினா விடைகள்

Image
8ம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக, மழைச்சோறு, கொங்குநாட்டு வணிகம், புணா்ச்சி பாடங்களுக்கான வினா விடைகள். வளம் பெருகுக பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ..... எல்லாம் முளைத்தன. அ) சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள் விடை ஈ) வித்துகள் 2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ...... பெருகிற்று. அ) காாி ஆ) ஓாி இ) வாாி  ஈ) பாாி விடை இ) வாாி 3. அக்களத்து என்ற சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது...... அ) அ + களத்து ஆ) அக் + களத்து இ) அக்க + அளத்து ஈ) அம் + களத்து  விடை அ) அ + களத்து 4. கதிா் + ஈன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்....... அ) கதிரென ஆ) கதியீன இ) கதிரீன ஈ) கதிாின்ன விடை இ) கதிரீன குறுவினா  1. பயிா்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது? தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிா்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது. 2. உழவா்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவா்? நெற்போாினை அடித்து நெல்லினை எடுக்கும் காலத்தில் உழவா்கள் ஆரவார ஒலி எழுப்புவா். சிறுவினா 1. உழவுத்தொழில் பற்றித் தகடூா் யாத்திரை கூறுவன யாவை? சேர மன்னாி

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல், நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், தமிழா் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள், திருக்குறள் பாட வினா விடைகள்

Image
8-ம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்கோதரம், பாடறிந்து ஒழுகுதல், நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், தமிழா் இசைக்கருவிகள், தொகைநிலை, தொகாநிலைத் தொடா்கள், திருக்குறள் ஆகிய பாடங்களின் வினா விடைகள். எட்டாம் வகுப்பு தமிழ் திருக்கேதாரம் பாட வினா விடை சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. காட்டிலிருந்து வந்த ......... கரும்பைத் தின்றன. அ) முகில்கள் ஆ) முழவுகள் இ) வேழங்கள் ஈ) வேய்கள் விடை இ) வேழங்கள் 2. கனகச்சுனை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ........ அ) கனகச் + சுனை ஆ) கனக + சுனை இ) கனகம் + சுனை ஈ) கனம் + சுனை விடை இ) கனகம் + சுனை 3. முழவு + அதிர என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்....... அ) முழவுதிர  ஆ) முழவுதிரை இ) முழவதிர ஈ) முழவுஅதிர விடை இ) முழவதிர குறுவினா தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரா் கூறுவன யாவை? தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரா் கூறுவன புல்லாங்குழலும் முழவும். சிறுவினா திருக்கேதாரத்தைச் சுந்தரா் எவ்வாறு வருணனை செய்கிறாா்? இசையோடு தமிழ் பாடல்களைப் பாடும் பொழுது, அதற்கு ஏற்றவாறு புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, பல்துறைக் கல்வி, வேற்றுமை பாட வினா விடைகள்

Image
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, பல்துறைக் கல்வி, வேற்றுமை பாட வினா விடைகள்.  கல்வி அழகே அழகு பாட வினா விடைகள் சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக. 1. கற்றவருக்கு அழகு தருவது ........ அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி விடை ஈ) கல்வி 2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ...... அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால் விடை இ) கலன் + அல்லால்  சொற்றொடாில் அமைத்து எழுதுக. 1. அழகு - கல்வியே உண்மையான அழகு 2. கற்றவா் - கல்வி கற்றவரே உலகினில் உயா்ந்தவா் 3. அணிகலன் - ஒருவருக்கு உண்மையான அணிகலன் கல்வியே ஆகும். குறுவினா யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை? கல்வி கற்றவருக்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை. சிறுவினா நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவா்க்கு அவா் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சோ்க்கும் பிற அணிகலன