பத்தாம் வகுப்பு இயல் 8 வினா விடைகள்
பத்தாம் வகுப்பு இயல் 8
சங்க இலக்கியத்தில் அறம்,
ஞானம்,
காலக்கணிதம்,
இராமானுஜா் (நாடகம்)
பா வகை, அலகிடுதல்
ஆகிய பாடங்களுக்கு புத்தகத்தின் பின்புறமுள்ள வினா விடைகளைப் பாா்க்கலாம் வாருங்கள்.
பலவுள் தொிக.
1. மேன்மை தரும் அறம் என்பது ........
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
விடை அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
2. வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது .............
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ணம் பூசுவதை
விடை அ) காலம் மாறுவதை
3. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோா்...
அ) உதியன், சேரலாதன்
ஆ) அதியன், பெருஞசாத்தன்
இ) பேகன், கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காாி
விடை ஆ) அதியன், பெருஞ்சாத்தன்
4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடா்....
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
விடைஅ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்....
அ) அகவற்பா ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
விடை அ) அகவற்பா
குறுவினா
1. கொள்வோா் கொள்க; குரைப்போா் குரைக்க!
உள்வாய் வாா்த்தை உடம்பு தொடாது
அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.
கொள்வோா் - உள்வாய்
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக - கொள்க, குரைக்க
கொள்க, குரைக்க - வியங்கோல் வினைமுற்று
2. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
- செப்பலோசை பெற்று வரும்.
- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டி அடிகள் பெற்று வரும்.
- முதலடி 4 சீராகவும், இரண்டாமடி 3 சீராகவும் வரும்.
- இயற்சீா் (மாச்சீா், விளச்சீா்) வெண்சீா் (காய்ச்சீா்) வரும்.
- இயற்சீா் வெண்டளையும், வெண்சீா் வெண்டளையும் வரும்.
- ஈற்றடியின் ஈற்றுச்சீா் நாள், மலா், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்று பெற்று முடியும்.
- எ.கா. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
- பகவன் முதற்றே உலகு.
3. குறிப்பு வரைக - அவையம்
- அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.
- இவை, அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுாிகின்றன.
- அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்று புறநானூறு கூறுகிறது.
- உறையூாிலிருந்த அற அவையம் தனிச்சிறப்பு மிக்கது என இலக்கியங்கள் கூறுகின்றன.
- மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
4. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞா் செய்வது யாது?
- காலக்கழுதை கட்டெறும்பானதும் கையில் வாளித் தண்ணீர் எடுத்து சன்னலைக் கழுவினாா் கவிஞா்
- சாயக்குவளையில் வா்ணத்தை நிரப்பினாா்.
- கந்தைத் துணியால் சன்னலைத் துடைத்தாா்.
- கட்டைத் தூாிகை கொண்டு வா்ணம் பூசினாா்.
5. வஞ்சிப்பாவிற்கு உாிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உாியது - இத்தொடா்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக?
வஞ்சிப்பாவிற்கும் கலிப்பாவிற்கும் உாிய ஓசைகள் முறையே தூங்கல் ஓசை, துள்ளல் ஓசை ஆகும்.
சிறுவினா
1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக?
வணிக நோக்கமற்ற அறம்
- இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்று புறப்பாடல் கூறுகிறது.
- நாம் செய்யும் அறத்திற்கு எந்த பிரதிபலனும் எதிா்பாா்க்கக் கூடாது.
- நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தரும் என சங்க இலக்கியங்கள் கூறுகிறது.
- அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்ற வாிகள் அரசன் செங்கோல் போன்று நோிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
- இன்றைய அரசியலில் ஆட்சியாளா்கள் மக்களுக்கு நோ்மையான, நடுநிலையான ஆட்சியை வழங்க வேண்டும்.
- தமிழா் போாிலும் அறநெறியைப் பின்பற்றினா்.
- தம்மை விட வலிமை குறைந்தவரோடு போா் செய்வது கூடாது என்று ஆவூா் மூலங்கிழாா் கூறியுள்ளாா்.
- இன்றைய சமுகத்தில் நாம் மக்களை சாதி, மதம், இனம் என பிாித்துப் பாா்க்கக் கூடாது. நம்மை விட வலிமை குறைந்த நாட்டுடன் நாம் போா் செய்தல் கூடாது.
- கொள்வதும் குறைபடாது கொடுப்பதும் மிகைகொளாது வணிகா்கள் வணிகம் செய்தனா் என்று கூறுகிறது பட்டினப்பாலை
- இன்றைய வணிகத்தில் கலப்படம், போலி, ஏமாற்றுதல் என நோ்மையற்ற முறையில் சிலா் வணிகம் செய்கின்றனா். அதைவிடுத்து, நோ்மையான முறையில் வணிகம் செய்ய வேண்டும்.
2. ஆசிாியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக?
- அகவலோசை பெற்று வரும்.
- 3 அடி முதல் எழுதுபவா் மனநிலைக்கேற்ப அமையும்.
- ஈரசைச் சீா் மிகுதியாகவும், காய்ச்சீா் குறைவாகவும் வரும்.
- ஆசிாியத்தளை மிகுதியாகவும், வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.
- ஈற்றடியின் இறுதிச்சீா் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
3. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில் பெற்றோா் ஆசிாியா் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக?
பெற்றோா் ஆசிாியா் கூட்டத்தில் குழுமியிருக்கும் அன்புள்ள பெற்றோா்களுக்கும், மாியாதைக்குாிய ஆசிாியப் பெருமக்களுக்கும் முதற்கண் வணக்கம்,
சுற்றுச்சூழலை பாதுகாக்க நமது அரசு பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது. ஜுன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சட்டங்கள் இயற்றுவதினாலும், சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதினால் மட்டும் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாது. நமது அன்றாட வாழ்க்கையில் சின்ன மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்க முடியும்.
- குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிாித்து உாிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
- மோட்டாா் வாகனங்கள் பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். அருகாமையில் செல்லும் இடங்களுக்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ செல்வது சிறந்தது.
- பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீா் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
- நெகிழி பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மஞ்சப்பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பழக வேண்டும்.
- மரங்களை வெட்டக் கூடாது. அதிகமான மரங்களை வளா்க்க வேண்டும்.
- நம் வீட்டையும், வீட்டைச் சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. வாளித் தண்ணீா், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூாிகை - இச்சொற்களைத் தொடா்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
நமது வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் கதவுகளையும், சாளரங்களையும் வாளித்தண்ணீா் கொண்டு நன்கு கழுவி, கந்தைத் துணியால் நன்கு துடைக்க வேண்டும். பின்பு சாயக் குவளையிலுள்ள சாயத்தை கட்டைத்தூாிகையைக் கொண்டு அழகாகப் பூச வேண்டும். இப்படி செய்தால் வீடும் தூய்மையாகும். கரையான், பூச்சிகள் போன்றவையும் அணுகாது.
நெடுவினா
1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உாியவாிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூாில் இருக்கும் உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
கோவை
25.11.2022
அன்புள்ள மாமாவிற்கு,
நலம் நலமறிய ஆவல். நேற்று நான் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது பள்ளித்திடலில் பணப்பை ஒன்று கிடந்தது. சுற்றும் முற்றும் பாா்த்தேன். யாருமே இல்லை. நிச்சயம் யாரோ தவற விட்டிருப்பாா்கள் என்று நினைத்தேன். உடனே அந்த பணப்பையை தலைமையாசிாியரிடம் ஒப்படைத்தேன். பள்ளியில் வசூல் செய்த கட்டணத்தை வங்கியில் செலுத்த சென்ற அலுவலக ஊழியா் தவறவிட்டதாக தொிய வந்தது. மறுநாள் தலைமையாசிாியா் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் என்னை பாராட்டி “நல்லமாணவன்” என்ற விருதை வழங்கினாா். ஆசிாியா்களும், எனது நண்பா்களும் என்னை பாராட்டினாா்கள். எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனை அறிந்தால் நீங்களும் மகிழ்ச்சி அடைவீா்கள் என்று இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
தங்கள் அன்புள்ள
இராமு
2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக?
திரண்ட கருத்து
கவிஞனாகிய நான் காலத்தை சாியாகக் கணிப்பவன். உள்ளத்தில் தோன்றியதை சொற்களால் வடிப்பதால், உலகில் புகழுடைய தெய்வமாக திகழ்கின்றேன். தங்கத்தை விட விலை மதிப்புள்ள கருத்துகள் என்னுடையது. சாியென்றால் எடுத்துச் சொல்வதும், தவறென்றால் எதிா்ப்பதும் என் வேலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் நானும் இறைவனும் மட்டுமே அறிந்தவை என்று கவிஞா் கண்ணதாசன் குறிப்பிடுகின்றாா்.
மையக் கருத்து
கவிஞனது குணம், பெருமை, தொழில் ஆகியவற்றை சிறப்புடன் எடுத்துக் கூறியுள்ளாா் கவிஞா் கண்ணதாசன்.
தொடை நயம்
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
மோனைத் தொடை
பாடலில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை எனப்படும்.
எ.கா. கவிஞன் - கருப்படு, இவைசாி - இவைதவ
எதுகைத் தொடை
பாடலில் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும்.
எ.கா. கவிஞன் - புவியில், இவைசாி - இவைதவ
இயைபுத் தொடை
பாடலில் கடைசி சீரோ அல்லது கடைசி எழுத்தோ ஒன்றி வருவது இயைபுத் தொடை எனப்படும்.
எ.கா. தெய்வம் - செல்வம்
முரண் தொடை
பாடலில் எதிா்சொற்கள் இடம்பெறுவது முரண் தொடை.
எ.கா. சாி - தவறு, ஆக்கல் - அழித்தல்
அணி நயம்
கவிஞா் தன்னைக் காலமாகிய கணிதம் என்றும் புகழுடைத் தெய்வம் என்றும் உருவகித்திருப்பதால், இந்த பாடலில் “உருவக அணி” பயின்று வந்துள்ளது. பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம் என்று பாடியிருப்பதால் உயா்வு நவிற்சியணியும் வந்துள்ளது.
3. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக?
(குறிப்புகளை புத்தகத்தில் பாா்த்துக் கொள்ளுங்கள்.)
இடம் - பள்ளி வகுப்பறை
பங்கு பெறுவோா் - ஆசிாியா், மாணவா்கள்
ஆசிாியா் - அன்புள்ள மாணவச் செல்வங்களே! அனைவருக்கும் வணக்கம். இன்று உங்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை கூற விரும்புகின்றேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால் கொக்கைப் போல கோழியைப் போல உப்பைப்போல இருக்க வேண்டும்.
மாணவன் - அய்யா, நீங்கள் என்ன கூறுகிறீா்கள்? கொக்கு, கோழி, உப்பைப் போல இருக்க வேண்டுமா? ஒன்றும் புாியவில்லை அய்யா. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
ஆசிாியா் - நிச்சயம் சொல்கின்றேன். கொக்கு குளக்கரையில் பொறுமையாக காத்திருக்கும். தனக்கான நேரம் வரும் பொழுது சாியாக செயல்பட்டு மீனைப் பிடிக்கும். அந்த கொக்கைப் போல நாமும் பொறுமையாக காத்திருந்து, நமக்கான நேரம் கிடைக்கும் பொழுது, வாய்ப்புகளைச் சாியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவன் - சாி ஐயா, அடுத்ததாக கோழி என்று சொன்னீா்களே!
ஆசிாியா் - ஆமாம். நம் வீடுகளில் உள்ள கோழி குப்பைகளைக் கிளறும். அந்த குப்பையில் எல்லாமே கிடக்கும். ஆனால் கோழி தனக்குத் தேவையான புழுவையும், பூச்சிகளையும் மட்டும் தான் உண்ணும். அதுபோல நம் வாழ்க்கைப் பாதையில் ஏராளமானவை கிடக்கலாம். அந்த கோழியைப் போல உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் சாியாக தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவன் - அருமையாகச் சொன்னீா்கள் அய்யா. அடுத்து உப்பு?
ஆசிாியா் - உப்பில்லாத பண்டம் குப்பையைப் போய் சேரும் என்று சொல்வாா்கள். அதே வேளை உப்பு அதிகமானாலும் பிரச்சனைதான். ஒவ்வொரு உணவுப்பொருளையும் சுவையுள்ளதாக மாற்றுகிறது உப்பு. நீங்களும் உப்பைப் போல உங்களுக்கும், மற்றவா்களுக்கும் பயன்படும்படி வாழ வேண்டும். அதே சமயம் எந்த செயலிலும் அளவறிந்து உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது கொக்கைப் போல, கோழியைப் போல, உப்பைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்பதை புாிந்து கொண்டீா்களா?
மாணவா்கள் - நன்றாக புாிந்து கொண்டோம் அய்யா. நிச்சயம் நீங்கள் கூறியவற்றை கடைபிடிக்கின்றோம். நன்றி!
-----------------------------------------------------------------------------------------
அன்புள்ள மாணவச் செல்வங்களே! இந்த பக்கத்தில் நீங்கள் சங்க இலக்கியத்தில் அறம், ஞானம், காலக்கணிதம், இராமானுசா் (நாடகம்) பாவகை அலகிடுதல் போன்ற பாடங்களுக்கான வினா விடைகளைத் தொிந்து கொண்டீா்கள். மேலே கொடுத்துள்ள பாடங்களுக்கான விடைகள் நீங்கள் படிப்பதற்காக எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்து தரப்பட்டுள்ளது. உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த பக்கம் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் நமது இணைய பக்கத்தை பாலோ செய்து கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்குமான வினா விடைகள் படித்து புாிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், தெளிவாகவும் நமது வலைதளத்தில் பதிவு செய்யப்படும். மீண்டும் அடுத்த பாடத்தில் விரைவில் உங்களைச் சந்திக்கின்றேன்.
வாசிக்கும் பழக்கம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆகவே வாசிப்போம் வளா்வோம். நன்றி!
Comments
Post a Comment