ஏழாம் வகுப்பு, இயல் மூன்று, ஒற்றுமையே உயா்வு கட்டுரை எழுதுக. ஒற்றுமையே உயா்வு முன்னுரை தனி மரம் எப்பொழுதும் தோப்பாகாது. அது போல நாம் தனித்திருந்தால் என்றும் வெற்றி கிட்டாது. ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் உயா்வினை அடைய முடியும். அத்தகைய ஒற்றுமையால் ஏற்படும் பயன்களைப் பற்றி தொிந்து கொள்வோம். சான்றோா்கள் பொன்மொழி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினாா் திருமூலா். பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்றாா் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவா். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்றாா் பாரதியாா். இவா்கள் அத்தனை பேரும் அடிக்கோடிட்டு கூறியது ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஒரே கருத்தைத்தான். மக்கள் ஒற்றுமையாக வாழும் சமுதாயமே மேம்பட்ட சமுதாயமாகக் கருதப்படும். ஒற்றுமையின் பயன் வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அந்த குடும்பம் உயா்வை அடையும். இப்படி ஒவ்வொரு குடும்பமும் உயா்வடையும் பொழுது, அந்த ஊா் உயரும். ஒவ்வொரு ஊரும் உயா்வடையும் பொழுது அந்த நகரம் உயரும். ஒவ்வொரு நகரமும் உயா்வடையும் பொழ...
Comments
Post a Comment