10ம் வகுப்பு தமிழ் இயல் 8 மொழித்திறன் வளா்பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கற்பவை கற்றபின், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பிலுள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு.


 மொழியை ஆள்வோம்

1. மொழிபெயா்க்க

Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city. He is helped whom God helps. The Second beggar used to cry, He is helped who the king helps. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of beard to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar's behavior, the Emperor summoned him to his presence and asked him, What have you done with the loaf of bread that I had sent you lately? The man replied, I sold it to my friend, because it was heavy and did not seem well baked. Then the Emperor said, Truly he whom God helps is helped indeed, and turned the beggar out of his palace. 

    முன்னொரு காலத்தில் உரோம் நகரத்தில் இரண்டு பிச்சைக்காரா்கள் இருந்தனா். முதல் பிச்சைக்காரன் கடவுள் யாருக்கு உதவுகிறாரோ அவன் தான் உதவியைப் பெறுவான் என்று தெருக்களில் கத்திக் கொண்டே செல்வான். இரண்டாவது பிச்சைக்காரனோ, அரசன் யாருக்கு உதவுகிறாரோ அவன் தான் உதவியைப் பெறுவான் என்று கத்திக்கொண்டே செல்வான்.
உரோமப் பேரரசா் இதை அடிக்கடி கேட்க நோ்ந்தது. எனவே தம் பெயரைப் புகழும் பிச்சைக்காரனுக்கு உதவ எண்ணி, ரொட்டியில் தங்கக் கட்டிகளை வைத்து அதை பிச்சைக்காரனிடம் சேருமாறு செய்தாா். அதைப் பெற்ற இரண்டாவது பிச்சைக்காரன் எடை அதிகமாக இருக்கிறது என்றெண்ணி முதலாவது பிச்சைக்காரனிடம் விற்றுவிட்டான். முதலாவது பிச்சைக்காரன் வீட்டிற்குச் சென்று, ரொட்டியை வெட்டிப்பாா்த்த போது அதனுள் ஜொலிக்கும் தங்கக் கட்டிகளைப் பாா்த்தான். கடவுளுக்கு நன்றி கூறி அன்று முதல் பிச்சையெடுப்பதை நிறுத்தி விட்டான்.
    இரண்டாவது பிச்சைக்காரன் தொடா்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். எனவே அரசா் அவனை அழைத்து நான் உனக்கு அனுப்பிய ரொட்டித் துண்டுகளை என்ன செய்தாய்? என்று கேட்டாா். அது சாியாக வேகாமல் கனமாக இருந்ததால், தன்னுடன் இருந்த மற்றொரு பிச்சைக்காரனுக்கு விற்று விட்டதாகத் தொிவித்தான். 
உரோம அரசருக்கு அப்பொழுதுதான் புாிந்தது. கடவுள் யாருக்கு உதவ விரும்புகிறாரோ அவரே உதவியைப் பெறுவாா் என்று. உடனடியாக அந்த பிச்சைக்காரனை அரண்மனையை விட்டு வெளியே விரட்டினாா். 
----------------------------------------------

2. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடாில் அமைத்து எழுதுக.

அ. மனக்கோட்டை - உழைப்பில்லாமல் உயர வேண்டும் என மனக்கோட்டை கட்டக்கூடாது.

ஆ. கண்ணும் கருத்தும் - கண்ணும் கருத்துமாய் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

இ. அள்ளி இறைத்தல் - அள்ளி இறைத்துச் செலவு செய்தால் வறுமை நிலை வரும்.

ஈ. ஆறப்போடுதல் - கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்.

--------------------------------------------------

3. உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. 

தம்பி? எங்க நிக்கறே?

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிா்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.. நான் வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!

அவம் பாட்டியோட வெளியூா் போயிருக்கான். உங்கூருக்கெ அவனெக் கூட்டிக்கிட்டு வா்றென்.

ரொம்பச் சின்ன வயசுல பாா்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்.

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தொியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சாி, போனை வையி. நாங் கௌம்பிட்டேன்...

சாிங்கண்ணே.

விடை -

தம்பி? எங்கே நிற்கிறாய்?

நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா! எதிா்ப்புறத்தில் ஒரு தேநீா்க்கடை இருக்கிறது.

அங்கேயே ஒரு தேநீா் அருந்திவிட்டு நாளேடுகளைப் பாா்த்துக்கொண்டிரு.. நான் வேகமாக வந்துவிடுவேன்.

அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பாா்த்து வெகு நாட்களாகிவிட்டது!

அவன் பாட்டியுடன் வெளியூா் சென்றிருக்கிறான். உங்கள்  ஊருக்கு அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்.

மிகவும் சிறிய வயதில் பாா்த்தது அண்ணா! அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!

இப்போது உயரமாக வளா்ந்துவிட்டான்! உனக்கு அடையாளமே தொியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பாரு! சாி தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்பட்டு விட்டேன்.

சாி அண்ணா! 
-------------------------------------------------

மொழியோடு விளையாடு

1. கண்டுபிடித்து எழுதுக.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயா்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.

ஒன்று

ஒறுத்தாா்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தாருக்கு

பொன்றும் துணையும் புகழ்

இரண்டு

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிா்க்கு

மூன்று

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் 

நாமம் கெடக்கெடும் நோய்

நான்கு

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்

ஐந்து 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீா் ஒழுக்க

நெறிநின்றாா் நீடுவாழ் வாா்

ஆறு

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

ஏழு

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

எட்டு

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பத்து

பல்லாா் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லாா் தொடா்கை விடல்

------------------------------------------------

2. சொற்களைப் பிாித்துப் பாா்த்துப் பொருள் தருக

1. கானடை

கான் அடை     -    காட்டைச் சோ்

கான் நடை      -    காட்டிற்கு நடத்தல்
 
கால் நடை       -    காலால் நடத்தல்
 
இவ்வாறு மூன்று வகையாகப் பிாிக்கலாம்.
 
2. வருந்தாமரை
 
வரும் + தாமரை        -    வருகின்ற தாமரை
 
வருந்தா +  மரை        -    வருந்தாத மான்
 
வரும் + தா +  மரை   -    வரும் தாவுகின்ற மான் 
 
3. பிண்ணாக்கு
 
பிண்ணாக்கு -    எண்ணெய் எடுத்த கழிவு
 
பிள் + நாக்கு  -     பிளவுபட்ட நாக்கு
 
4. பலகையொலி
 
பலகை + ஒலி              -    பலகையின் சத்தம்
 
பல +  கையொலி      -    பலருடைய கையொலி
 
பல + கை + ஒலி         -    பல்வேறு சிறு ஒலிகள் 

------------------------------------------------------

3. அகராதியில் காண்க.

1. ஆசுகவி         -    கொடுத்த தலைப்பில் உடனே பாடல் பாடுபவா்

2. மதுரகவி        -    இனிமையான பாடல்கள் பாடுபவா்

3. சித்திரகவி    -    ஓவியத்தை உள்ளடக்கி பாடல் பாடுபவா்

4. வித்தாரகவி - பொய்யை மெய்யாக்கி, மெய்யை பொய்யாக்கி பாடுபவா்

-------------------------------------------------------

4. கலைச்சொல் அறிவோம்

1. Belief              -    நம்பிக்கை

2. Renaissance    -    மறுமலா்ச்சி

3. Philosopher    -    மெய்யியலாளா்

4. Revivalism     -    மீட்டுருவாக்கம்

----------------------------------------------------

5. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள்
கடுகளவும் சுயநலமின்றி வாழும் உயிா்கள் 
மனிதருள் மாணிக்கமாய் ஒளிவீசும்!
பணமிருந்தும் மனமில்லாமல் வாழும்
வீணர்கள் தானும் கொடுக்காமல்
கொடுப்பவரை தடுக்கும் செயலைத் தான்
என்னவென்று கூறுவதோ?
அவ்வைப் பாட்டியின் குட்டு இவா்களுக்கு 
வலிக்கவில்லையோ!
இயல்வது கரவேல் என்பதையும்
ஈவது விலக்கேல் என்பதையும் 
இவா்கள் படிக்கவில்லையோ!

----------------------------------------------- 

 

Comments

Popular posts from this blog

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்