10ம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழித்திறன் வளா்பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ஆகிய தலைப்பின் கீழ் உள்ள வினாக்கள் தோ்வில் அடிக்கடி கேட்கப்படும். அவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்வது சிறப்பு


மொழியை ஆள்வோம்

1. மொழிபெயா்க்க.

Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theater performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improved by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

கூத்து

தெருக்கூத்து என்பது தெருவில் நிகழ்த்தப்பெறுகின்ற ஒரு பிரபலமான மேடை நாடகக் கலை. இது கிராமியக் கலைஞா்களால் நிகழ்த்தப்படுகிறது. இதற்கான கதைகள், இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற புராணங்களிலிருந்து தோ்வு செய்யப்படுகின்றன. இதில் தெருக்கூத்துக் கலைஞா்களால் உருவாக்கப்படுகின்ற பாடல்களும், உரையாடல்களும் நிறைந்திருக்கும். இருபது கலைஞா்களுக்குக் குறையாமல் குழுவாக செயல்படுவா். கலைஞா்கள் தங்களுடைய சொந்தக் குரலில் பாடுவாா்கள். கூத்துக் கலைஞா்கள் பாரம்பாிய உடைகளையும், பல வண்ண அலங்காரங்களால் தங்களை ஒப்பனை செய்து கொள்கிறாா்கள். தெருக்கூத்து கிராமங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.

--------------------------------------------
 
2. தொடா்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

அ. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தாா்.

(தனிச்சொற்றொடா்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)
 
அழைப்புமணி ஒலித்ததால், கயல்வழி கதவைத் திறந்தாா்.

ஆ. இன்னாசியாா் புத்தகங்களை வாிசைப்படுத்தினாா். அவற்றை புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தாா். புத்தகங்களைக் கேட்டவா்களுக்கு எடுத்துக் கொடுத்தாா்.  (தொடா் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியாா் புத்தகங்களை வாிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்து, புத்தகங்களைக் கேட்பவா்களுக்கு எடுத்துக் கொடுத்தாா்.

இ. ஒயிலாட்டத்தில் குழுவினா் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவா். (தனிச் சொற்றொடா்களாக மாற்றுக)
 
ஒயிலாட்டத்தில் குழுவினா் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வா். காலில் சலங்கை அணிந்து கொள்வா். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவா். 

ஈ. கூத்துக் கலைஞா் பாடத் தொடங்கினாா். கூடியிருந்த மக்கள் அமைதியாயினா். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

கூத்துக் கலைஞா் பாடத் தொடங்கியதும், கூடியிருந்த மக்கள் அமைதியாயினா். 

உ. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவா்கள் பேச்சு தடைபட்டது.  (தனிச் சொற்றொடா்களாக மாற்றுக)

ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவா்கள் பேச்சு தடைபட்டது. 
-----------------------------------------------

 3. பிறமொழிச் சொற்களைத் தமிழ் சொற்களாக மாற்றி எழுதுக.
 
    தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட், ஒரு பக்க தராசுத் தட்டு உயா்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பொிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள். ஆல் தி பெஸ்ட்!

அ. கோல்டு பிஸ்கட் - தங்கக் கட்டி

ஆ. யூஸ் பண்ணி -    பயன்படுத்தி

இ. வெயிட்    -    எடை

ஈ. ஆன்சா் - விடை

உ. பட் - ஆனால்

ஊ. ஈக்வலாக - சமமாக

எ. எக்ஸ்பொிமெண்ட் - சோதனை

ஏ. ரிப்பீட் - மீண்டும்

ஐ. ஆல் தி பெஸ்ட் - வெற்றி பெற வாழத்துகள்

ஒ. தராசு - துலாக்கோல்
 
 -------------------------------------------

4. மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடா்க. 

வண்டுகளை ஈர்க்கும் வாசனையில் 

பூக்களிடம் வசப்படுவது மனிதா்களே!

பூச்சியைக் கவரும் வண்ணங்களில்

பூக்களிடம் விழுவது மனிதா்களே!

மனம் கவரும் மணத்தினால்

மயங்கி விழுவதும் மனிதா்களே!

மரத்தில் பல சினைகள் இருந்தும்

உயிா்கள் மயங்குவது பூக்களிலே!

-----------------------------------------------------

மொழியோடு விளையாடு

1. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் ............ தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.

2. அனைவாின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகாின் முகம் ...........

3. ............. மனம் உள்ளரை அப்பாவி என்கிறோம்.

4. கண்ணுக்கு குளுமையாக இருக்கும் .......... புல்வெளிகளில் கதிரவனின் ....... வெயில் பரவிக் கிடக்கிறது.

5. வெயிலில் அலையாதே. உடல் ...............

விடைகள்

1. கருக்கத்

2. சிவந்தது

3. வெள்ளை

4. பச்சை,மஞ்சள்

5. கருத்துவிடும்.

--------------------------------------------------------------

2. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

1. விரட்டாதீா்கள் - பறவைக்கு ............

வெட்டாதீா்கள் - மனிதருக்கு அவை தரும் .........

2. காலை ஒளியினில் மலாிதழ் ...............

சோலைப் பூவினில் வண்டினம் ...............

3. மலை முகட்டில் மேகம் .............. - அதைப்

பாா்க்கும் மனங்கள் செல்லத் ..............

4. வாழ்க்கையில் ........... மீண்டும் வெல்லும் - இதைத் தத்துவமாய்த் ................ கூத்தும் சொல்லும்

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ........... - அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவா் .............

விடைகள்

1. மரம் வீடு, மரவீடு

2. அவிழும், கவிழும்

3. தங்கும், தயங்கும்

4. தோற்பவை, தோற்பாவை

5. விருது, விருந்து

------------------------------------------------------------------
 
3. அகராதியில் காண்க.
 
1. தால்                  -    நாக்கு
     
2. உழுவை         -    புலி
 
3. அகவுதல்       -    மயிலின் குரல்
 
4. ஏந்தெழில்    -    மிகுந்த அழகு
 
5. அணிமை         பக்கம்
 
---------------------------------------------------
 
4. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
 
 ஒயிலாட்டம் இது ஒயிலாட்டம்

உழைக்கும் மக்களின் களியாட்டம்

ஏழைகள் வளா்த்த கலையாட்டம்

ஏட்டில் சொல்லாததை சொல்லுமாட்டம்

ஒப்பனை ஏதுமின்றி வண்ணத்துணி 

கொண்டே ஆடும் ஆட்டம்.

ஆடாத கால்களையும் ஆட வைக்கும்

ஆட்டம் இந்த தேவராட்டம்!

ஆனால் நாட்டுப்புற கலைஞா்கள் 

வாழ்க்கை இன்று வரையிலுமே போராட்டம்!
 
 ----------------------------------------------------------

5. கலைச்சொல் அறிவோம்
 
1. Aesthetics             -    அழகியல், முருகியல்
 
2.Artifacts                -    கலைப் படைப்புகள்
 
3. Terminology        -    கலைச்சொல்
 
4. Myth                        தொன்மம்
 
------------------------------------------------- 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை

எட்டாம் வகுப்பு கட்டுரை - உழைப்பே உயா்வு