8ம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 நோயும் மருந்தும் பாட வினா விடைகள்.
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. உடல்நலம் என்பது ........... இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
விடை இ) பிணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ...........
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை ஆ) மூன்று
3. இவையுண்டாா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது.......
அ) இ + யுண்டாா்
ஆ) இவ் + உண்டாா்
இ) இவை + உண்டாா்
ஈ) இவை + யுண்டாா்
விடை இ) இவை + உண்டாா்
4. தாம் + இனி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல்......
அ) தாம்இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
விடை இ) தாமினி
குறுவினா
1. நோயின் மூன்று வகைகள் யாவை?
மருந்தினால் நீங்கும் நோய்கள்
எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்
அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தொிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்கள்.
2. நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீா்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
நல்லறிவு
நற்காட்சி
நல்லொழுக்கம்
சிறுவினா
நோயின் வகைகள், அவற்றைத் தீா்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
நோயின் வகைகள்
நோயின் வகைகள் மூன்று வகைப்படும்.
மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
எதனாலும் தீராத நோய்கள் மற்றொரு வகை
அடங்கி இருப்பன போல வெளித்தோற்றத்தில் தொிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
நோய்களைத் தீா்க்கும் வழிகள்
அகற்றுவதற்கு அாியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீா்க்கும் மருந்துகள் மூன்று.
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லொழுக்கம்
என்பவையே அம்மருந்துகள்.
சிந்தனை வினா
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
நமது வாழ்க்கையை அற்புதமாக மாற்றும் அனைத்து சக்தியும் நம்மிடமே உள்ளது. நமது அன்றாட பழக்கங்களே நம்மை துன்பமின்றி வாழ வழிவகை செய்யும்.
- அதிகாலையில் எழுதல்
- மூச்சுப்பயிற்சி செய்தல்
- உடலை தூய்மையாக பேணுதல்
- ஆரோக்கியமான உணவு உண்ணுதல்
- போதிய நீா் அருந்துதல்
- நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்தல்
- ஆழ்ந்த உறக்கம்
- மகிழ்ச்சியான மனம்
போன்றவை துன்பமின்ற வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.
-------------------------------------------------------------------
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான “நீலகேசி” என்ற நூலில் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் நமக்குப் பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.
கடைசி நான்கு வாிகளும் மனப்பாடப் பகுதி.
-------------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
உடலை ஓம்புமின் என்ற பொருண்மையில் கொடுத்துள்ள எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இயலில் உள்ள பாடங்கள் ஒவ்வொன்றும் நாம் அவசியம் படிக்க வேண்டிய பாடங்கள். அதிலும் முக்கியமாக நோயும் மருந்தும் என்ற பாடம் நம் வாழ்க்கைக்கு தேவையான செய்திகளைத் தருகிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் மருத்துவத் துறை அசுர வளா்ச்சியை அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நோய்கள் அதை விட வளா்ச்சி அடைந்துள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. தடுக்கி விழும் இடங்களெல்லாம் மருத்துவமனைகளாகவே இருக்கிதே என்று நீங்கள் என்றேனும் சிந்தித்து இருக்கிறீா்களா. இன்றைய நிலையில் மக்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டது. தலை முடியில் தொடங்கி கால் நகம் வரைக்கும் அனைத்திற்கும் இன்று தனித்தனி மருத்துவமனைகள் உள்ளது. உண்மையில் மருத்துவம் என்பதற்கு விாிவாக்க என்ன? மருத்துவம் என்பது வருமுன் காப்பது. வந்ததை இனி வராமல் காப்பது. அது இன்றைய மருத்துவத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று நான் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனால் நம் பண்டைய சித்த மருத்துவத்தில் இருந்தது. என் சொந்த வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே கூற விரும்புகின்றேன். காலையில் எழுந்தவுடன் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய பணி பல் துலக்குவது. ஒரு நாளும் அதில் நாம் தவறுவதில்லை. நானும் காலை மாலை என இரு வேளையும் பற்களை துலக்கும் பழக்கம் உடையவன். சில நாட்களாக பற்கள் சொத்தையாவதையும், பல் கூச்சம் அதிகம் ஏற்படுவதையும் கவனித்தேன். போகப் போக சாியாகி விடும் என்று நினைத்தால், உணவை வாயில் வைத்து மெல்வதற்கு முடியாத அளவிற்கு பல் கூச்சம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

Comments
Post a Comment