தமிழ் இலக்கணம் 3, ஓர், ஒரு சொற்கள் வரும் இடங்கள் அறிவோமா?
தமிழ் இலக்கணம் 3
ஆங்கிலத்தில் a e i o u எழுத்துகளுக்கு
முன் an பயன்படுத்த வேண்டும். மற்ற எழுத்துகளுக்கு முன் a பயன்படுத்த வேண்டும் என்ற
விதி உள்ளது. An apple, An Orange, a Tree, a Post office. இதுபோல் தமிழிலும் உண்டு
என்பதை நீங்கள் பார்த்த காணொலி (வீடியோ) மூலம் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
காணொலியைக் காண விரும்பினால்
CLICK HERE
கீழ்க்காணும் 10 தொடர்களிலும் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுங்கள். விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. (முடிந்தவரை நீங்களே விடையளிக்க முயலுங்கள்)
வினாக்கள்
- 1.
ஒரு
அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- 2.
இரண்டு
மரத்தையும் வெட்டி விட்டனர்.
- 3.
மீண்டும்
ஒரு முறை எழுதிக் காட்டவும்
- 4.
ஒரு
இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
- 5.
இரு
அசைச் சொற்களை எழுதிப் பழகுங்கள்
- 6.
ஒரு
இனிய பாடல் கேட்டேன்
- 7.
இரண்டு
மனம் வேண்டும்.
- 8.
ஒரு
ஆயிரம் முறை நான் கூறியிருப்பேன்.
- 9.
ஒரு
எழுத்து சொற்கள், இரண்டு எழுத்துச் சொற்கள்
- 10. இரண்டு ஆண்டு கடந்து விட்டன.
விடைகள்
- 1.
ஓர்
அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- 2. இரு மரத்தையும் வெட்டி விட்டனர்.
- 3.
மீண்டும்
ஒரு முறை எழுதிக் காட்டவும்
- 4.
ஓர்
இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
- 5.
ஈரசைச்
சொற்களை எழுதிப் பழகுங்கள்
- 6.
ஓர்
இனிய பாடல் கேட்டேன்
- 7.
இரு மனம் வேண்டும்.
- 8.
ஓராயிரம்
முறை நான் கூறியிருப்பேன்.
- 9.
ஓர்
எழுத்து சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள்
- 10.
ஈராண்டு
கடந்த விட்டன.
Comments
Post a Comment