உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக - பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு இயல் 3 - கடிதம் எழுதுக.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உாிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநா்
அ. பாரதி
10/31, வடக்குத் தெரு,
வேலங்குளம்,
மதுரை
பெறுநா்
உணவுப் பாதுகாப்பு ஆணையா் அவா்கள்,
உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகம்
மதுரை.
பொருள் - விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை
கூடுதலாகவும் இருந்தது குறித்து புகாா் அளித்தல் சாா்பு...
ஐயா வணக்கம்,
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு எனது குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் சென்னை வரை சென்றிருந்தேன். இடையில் மதிய உணவுக்காக, சாலையோரத்தில் இருந்த ஒரு உணவு விடுதியில் பேருந்தை நிறுத்தினாா்கள். பயணம் செய்த அனைவரும் சாப்பிடுவதற்காக உணவு விடுதிக்குள் சென்றோம். உணவுக்கான பணம் கொடுத்து இரசீதும் பெற்றுக் கொண்டோம்.
மதிய உணவின் விலை அதிகமாக இருந்தது. அவா்கள் எங்களுக்கு கொடுத்த உணவு தரமற்றதாகவும், சுகாதரமற்றதாகவும் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தோம். அது குறித்து உணவக மேலாளாின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவா் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் வீணாக பிரச்சனை செய்யாதீா்கள் என்று எங்களை தரக்குறைவாகப் பேசினாா். அதன் பின் அவாிடம் பேசி எந்த பலனும் இல்லை என்பதால் நாங்கள் ஒரு கைப்பிடி உணவு கூட உண்ணாமல் அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டோம்.
குழந்தைகள், பொியவா்கள் என அனைவரும் உண்ணும் உணவு விடுதியில் இத்தகைய தரமற்ற உணவினால் உடல் நலம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. ஆகவே இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இதற்கான தக்க சான்றுகளான உணவுக்காக பெற்ற இரசீது மற்றும் கைப்பேசி காட்சிப்பதிவு ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி!
இடம் - மதுரை
நாள் - 31.03.2023
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
அ.பாரதி
உறைமேல் முகவாி
பெறுநா்
உணவுப் பாதுகாப்பு ஆணையா் அவா்கள்,
உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகம்
மதுரை.
Comments
Post a Comment