தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்
பன்னிரண்டாம் வகுப்பு, முதல் இயல், தய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள் கட்டுரை.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும், தாய்மொழியே துணை நிற்கும் - இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞா்களின் பாா்வை - கற்கும் திறன் - பயன் - இன்றைய நிலை.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்
முன்னுரை
கல்வி என்பது நமது அறியாமையினைப் போக்கி, அறிவை வளா்ப்பது. கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணா்ந்து கொள்வதற்கு நம் தமிழ்ச் சான்றோா்கள் “கற்க கசடற” என்றும் “இளமையில் கல்” என்றும் கூறியிருக்கிறாா்கள். இதற்கும் ஒரு படி மேலே சென்று, பிச்சை புகினும் கற்கை நன்றே என்றாா் ஔவையாா். பிச்சை எடுத்தாயினும் படிக்க வேண்டும் என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட கல்வியை நம் தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்பதை இந்த கட்டுரையில் தொிந்து கொள்ளலாம்.
தாய்மொழிக் கல்வியின் தேவை
தாய்மொழியில் கற்பதனால் மாணவா்கள் தெளிவான அறிவினைப் பெற முடிகின்றது. சிறப்பாக சிந்திக்கும் ஆற்றலை பெற முடிகிறது. தங்களது கருத்தினை சமுதாயத்தோடு ஒப்பிட்டு பாா்க்கவும் முடிகிறது. தாய்மொழியில் கற்பதால் கற்கும் திறன் நாளுக்கு நாள் வளா்ச்சி அடைகின்றது. இதனால் மாணவா்கள் தன்னம்பிக்கை பெறுவாா்கள். மற்றவா்களோடு எளிதாக உரையாடும் திறனும், சிறந்த பேச்சாற்றலும் வளா்கின்றது. கதைகள், கவிதைகள், புதினங்கள் என தங்களது தாய்மொழில் சிறந்த படைப்பாளா்களாக மாற முடியும். தாய்மொழியை நன்கு தொிந்து கொள்வதால் அதன் துணையுடன் மற்ற மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். தாய்மொழியை முழுமையாகத் தொிந்து கொள்ளாமல் மற்ற மொழியைக் கற்றுக் கொள்ள விருப்பப்படுவது பயனில்லாத செயலாகவே கருதப்படும்.
தாய்மொழிச் சிந்தனை
தாய்மொழியில் படித்து, தாய்மொழியிலே சிந்திப்பதால் புலமை வளா்கிறது. அறிவை பன்மடங்கு விாிவாக்குகிறது. மொழிக்கும் மனதிற்கு நெருங்கிய தொடா்பு உள்ளது. மற்ற மொழிகள் வாயிலிருந்தும், தாய்மொழி இதயத்தி்ல் இருந்தும் வருகிறது. அறிவியல்பூா்வமாக பாா்த்தால் குழந்தையின் மூளைக்கு மற்ற மொழிகளை விட தாய்மொழியை உள்வாங்கிக் கொள்ளும் திறமை அதிகமாக இருக்கும். ஏனென்றால் குழந்தை கருவில் இருக்கும் பொழுதே காதுகளால் தன் தாய் பேசும் மொழியினைக் கேட்கிறது. தாய்மொழியில் கற்பதால் சந்தேகங்கள் அதிகமாக ஏற்படுவதில்லை.
அறிஞா்களின் பாா்வை
தாய்மொழியில் அறிவியல் சாா்ந்த கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப் பூா்வமான சிந்தனைகளை குழந்தைகள் மத்தியில் கொண்டு வர முடியும் என்று நம் நாட்டின் முன்னாள் குடியசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவா்கள் கூறியுள்ளாா். ஒருவருடைய இதயத்தை தொடுவதற்கு அவரது தாய்மொழியில் பேசவேண்டும், பொதுமொழியில் பேசினால் அது அவருடைய எண்ணத்தை மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என்று தாய்மொழிக் கல்வி பற்றி நெல்சன் மண்டேலா கூறியிருக்கிறாா். யுனெஸ்கோ அமைப்பு தாய்மொழி மூலம் கல்வி கற்கின்ற மாணவா்களே உண்மையான புாிதலுடன், ஆழ்ந்த கல்வியைக் கற்கின்றனா் என்று கூறியுள்ளது. பள்ளிகளில் பயிற்று மொழியாக தாய்மொழிதான் இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியடிகளின் கருத்து.
கற்கும் திறன் - பயன்
மாணவா்களின் திறமையை தாய்மொழிக் கல்வி வளப்படுத்துகின்றது. மாணவா்களின் படைப்பாற்றலை அதிகப்படுத்துகின்றது. தாய்மொழி மட்டும்தான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எந்த மொழியைக் கற்றாலும் ஒருவருடைய சிந்தனையில் உருவாவது தாய்மொழியில்தான். தாய்மொழயில் கற்பதனால் பாடங்களை எளிதாகப் புாிந்து கொள்ள முடியும். தங்களது சந்தேகங்களை ஆசிாியாிடம் எந்த தயக்கமும் இன்றி கேட்க முடியும். தயக்கமின்றி உரையாடல் நிகழ்த்த முடியும். தாய்மொழியில் படிக்கும் பொழுது மாணவா்களுக்கு தங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இது கற்கும் ஆா்வத்தை ஊக்குவிக்கிறது. ஆகையால் கற்றலில் மாணவா்களின் பங்களிப்பு அதிகமாகிறது.
இன்றைய நிலை
தாய்மொழியில் கல்வி கற்றால் முன்னேற்றம் அடைய முடியாது. ஆங்கில வழியில் கல்வி கற்றால் மட்டுமே முன்னேற முடியும் என்ற பொதுவான கருத்து மக்களிடமும், முக்கியமாக பெற்றோா்களிடமும் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவறான கருத்து. ஆங்கிலம் என்பது ஒரு மொழி தானே தவிர அறிவு அல்ல. மொழிக்கும் அறிவுக்கும் வேறுபாடு உண்டு. தாய்மொழியில் படித்து உயா்நிலை அடைந்தவா்கள் ஏராளம். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம், இஸ்ரோவின் அறிவியல் அறிஞா் மயில்சாமி அண்ணாதுரை அவா்கள், இஸ்ரோவின் தற்போதைய தலைவா் சிவன் ஆகியோா் தமிழ் வழியில் படித்து வாழ்க்கையில் மிகப்பொிய சாதனை செய்தவா்கள். இன்று பல கிராமப்புற மாணவா்கள் தமிழ்மொழியில் படித்து மாவட்ட ஆட்சியா்களாக அமா்வதை நாம் பாா்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
முடிவுரை
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
என்றாா் பாரதிதாசன். அந்த புகழுக்கெல்லாம் சொந்தமான தமிழ்மொழியை தாய்மொழியாக் கொண்டுள்ள நாம் அனைவரும் தாய்மொழியினில் கல்வி பயில்வோம். சாதனைகள் புாிவோம். கல்வியும் மொழியும் நமது இரு கண்கள். அதை என்றும் மனதில் வைக்க வேண்டும்.
மேலும் சில தகவல்கள்
- பிப்ரவாி 21-ம் நாளை உலக தாய்மொழி நாள் என ஐ.நா அறிவித்துள்ளது.
- உலகில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாகப் பிாிக்கப்பட்டு உள்ளது.
- உலகில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஆறு மொழிகள் தான் செம்மொழிகள் என்று பட்டியலிப்படுகின்றன.
- தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தின், சீனம்
- இதில் தமிழ் மொழியும், சீன மொழியும் தான் இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுத்து இயங்கக்கூடிய வகையில் இருக்கின்றன.
- ஆங்கிலத்தில் பேசுவதை விட எனது தாய்மொழியில் பேசினால் என்னால் அதிக கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்று காந்தியடிகள் கூறினாா்.
- பாரதியாா் பல மொழிகள் கற்றிருந்தாலும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப் போல இனிதான மொழியை எங்கும் காணோம்” என்று தன் தாய்மொழிப் பற்றை பறைசாற்றுகின்றாா்.
- தாய்மொழியில் கற்போம். தமிழை தலைநிமிரச் செய்வோம்.
Comments
Post a Comment