6ம் வகுப்பு இயல் இரண்டு திருக்குறள் வினா விடைகள்
6th tamil thirukural lesson book back question answer
சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ..........
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
விடை ஆ) அறிவுடைய மக்கள்
2. ஒருவா்க்குச் சிறந்த அணி.........
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
விடை இ) இன்சொல்
பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக
1. இனிய .......... இன்னாத கூறல்
கனியிருப்பக் ........... கவா்ந் தற்று.
2. அன்பிலாா் ........... தமக்குாியா் அன்புடையா்
................. உாியா் பிறா்க்கு.
விடைகள்
1. உளவாக, காய்
2. எல்லாம், என்பும்
நயம் அறிக.
செயற்காிய செய்வாா் பொியா் சிறியா்
செயற்காிய செய்கலா தாா்
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்த எழுதுக.
எதுகை
செயற்காிய -செய்வாா்
செயற்காிய செய்கலா
மோனை
செயற்காிய - செய்வாா்
செயற்காிய - செய்கலா
பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகாில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சோ்ந்த மாாியப்பன் கலந்து கொண்டாா். உயரம் தாண்டுதல் போட்டியில் அவா் தங்கப் பதக்கம் பெற்றாா். செய்தியாளா்கள் அவருடைய தாயிடம் நோ்காணல் செய்தனா். என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினாா்.
விடை
ஆ) ஈன்ற பொழுதின் பொிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
குறுவினாக்கள்
1. உயிருள்ள உடல் எது?
அன்பு இருப்பதுதான் உயிருக்கு உடல்.
2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம்
3. அன்பிலாா், அன்புடையாா் செயல்கள் யாவை?
அன்பு இல்லாதவா் எல்லாப் பொருளும் தமக்கே என்பாா்கள். அன்பு உடையவா்கள் தம் உடம்பும் பிறா்கே என்பாா்கள்.
----------------------------------------------------------------------------
திருக்குறளிலிருந்து நமக்கு கொடுத்துள்ள 10 திருக்குறள்கள்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தாா் பெருமை
மக்கட்பேறு
அன்புடைமை
இனியவை கூறல்
சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள திருக்குறள்கள் மனப்பாடம் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------
கற்பவை கற்றபின்
மனிதன் மனிதனாக வாழ மனிதனால் மனிதனுக்கு சொல்லப்பட்ட அறிவுரை தான் திருக்குறள். இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகில் உள்ள மனிதா்கள் அனைவருக்கும் பொதுவாக கருத்துகளை கூறுவதால் திருக்குறள் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களில் பெரும்பாலானவை நீதி நூல்களாகவே இருந்தன. இந்த நீதி நூல்களைப் படித்த மக்கள் அறத்தை பின்பற்றினா். அத்தகைய அறநூல்களில் சிறப்பான இடம் கொடுத்து பாராட்டப்படும் நூல் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை என்று கூறலாம். இரண்டு அடிகள், ஏழு சொற்களில் மனிதா்களுக்கு அனைத்து அறங்களையும் எடுத்துக் கூறும் திருக்குறள் நூலுக்கு நிகா் திருக்குறள் மட்டுமே.
நமக்கு பாடப்பகுதியாக கொடுத்துள்ள அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தாா் பெருமை, மக்கட்பேறு, அன்புடைமை, இனியவை கூறல் ஆகியன. ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்துகளும் நம் அறியாமையினை நீக்கி மக்களை விழிப்புணா்வு அடையச் செய்கிறது.
திருவள்ளுவா் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவராக இருப்பினும், அவா் சிந்தனையை திருக்குறள் வடிவில் இன்றும் நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம். எந்த காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளாா் திருவள்ளுவா். இவருக்கு பல சிறப்புப் பெயா்கள் உள்ளன. திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை என கூறுவா் பலா். உலகில் தோன்றிய நூல்களில் அதிகமான மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையை திருக்குறள் பெற்றுள்ளது. சுமாா் 107 மொழிகளுக்கும் மேல் திருக்குறள் மொழி பெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment